சமஸ் கட்டுரை 2 நிமிட வாசிப்பு

வந்தது நல்ல செய்தி: அருஞ்சொல்

சமஸ் | Samas
22 Sep 2021, 12:00 am
0

புதிய அலுவலகத்தில் இன்று குடிபுகுந்தோம். 

தேடியபடி ஓர் இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இந்த இடம் பார்த்தவுடன் பிடித்தது. பிடித்த கையோடு உள்ளே வந்தாயிற்று. இடம் பார்த்துக்கொடுத்த நண்பர், "அஷ்டமி நவமி ஆயிற்றே! செப்.15 அன்றைக்கா பால் காய்ச்சப்போகிறீர்கள்?" என்றார். "கல்யாணத்தையே 'கரி நாள்' அன்று செய்தவன் நான்" என்று சிரித்தேன்.

கடவுளால் அளிக்கப்படும் ஒவ்வொரு நாளுமே நல்ல நாள்; நம்முடைய வசதியும், தனிப்பட்ட நம்பிக்கைகளும்தான் முக்கியமே தவிர, வெளியிலிருந்து வரும் பஞ்சாங்க வழிமுறைகள் அல்ல என்பது என் நம்பிக்கை. காந்திக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கும் ஆளுமையான  அண்ணா பிறந்த நாளும் இது என்பது கூடுதல் விசேஷம்.

நண்பர்கள் "செப். 11 அன்று புதிய ஊடகம் பொதுவெளிக்கு வரும் என்று சொன்னீர்களே!" என்று கேட்பது காதில் விழுகிறது. அன்றாடம் அலுவல் நடக்கிறது. பெயர் அனுமதி இன்னமும் வந்தடையவில்லை; ஓரிரு வாரங்களுக்குள்  வந்துவிடும்; அந்த நாளையொட்டிய காந்தி நாள் ஒன்றில் ஊடகம் உங்கள் பார்வைக்கும் வந்துவிடும்.

அருள் ஒளியே வழி காட்டு!

செப்.15 என்பதில் எந்தத் திட்டமிடலும் இல்லை; முந்தைய திட்டமிடல்கள் எதிலும் இது இல்லை; தற்செயல்தான்!

காலையில் புதிய அலுவலகத்தில் குடிபுகுந்தோம்; மாலையில் புதிய ஊடகத்துக்கான பெயர் வந்தடைந்திருக்கிறது. ஏன் இதை நான் நேசிக்கும் அண்ணாவின் ஆசி அல்லது இனிவரும் காலத்தின்  தமிழ்ப் பணிக்கான அவருடைய கட்டளை என்று கருதிடக் கூடாது?

நான் வணங்கும் காந்தி மட்டும் அல்ல; நேசிக்கும் அண்ணாவும் தீவிரமான பத்திரிகையாளர். அறிவை ஆயுதமாக மக்களுக்குக் கையளித்த ஜனநாயகர். தான் நேசித்த தமிழ் மக்களோடு இறுதி நாட்கள் வரை எழுத்தின் வழி உரையாடியவர். தமிழ் இதழியலின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான அண்ணா பிறந்த நாளில் இந்தப் பெயர் வந்தடைந்தது சூட்சமமாக சில செய்திகளை உள்ளடக்கியிருப்பதாக உணர்கிறேன். 'தமிழ் மக்களின் உறுதியான குரலாகச் செயல்படும்' என்ற உத்தரவாதத்தோடு புதிய ஊடகத்தின் பெயரை நண்பர்களுக்குப் பகிர்கிறேன்: அருஞ்சொல்!

2021, செப்டம்பர் 15, காலை, மாலை முகநூல் பதிவுகள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்ணா நூலகம்ஆளுமைகள்எருமை வளர்ப்புதொல்லியல் துறைவிடுதலைபொதிகை தொலைக்காட்சிகவிஞர் சுகுமாரன்நிதி நிர்வாகம்ஏழைக் குடும்பங்கள்முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகட்டுமான விதிமுறைகள்ஆளுநர்கள்ஆக்ஸ்ஃபோம் இந்தியா – நியுஸ் லாண்டரிகிலானிஏன்?பாண்டியர்கள்பிளாஸ்மா காட்சி ஊடகமும்விரிசுருள் சிரை நோய்ஆ.சிவசுப்பிரமணியன் சமஸ் பேட்டிரேணு மகந்தாநவீன சிந்தனைகள்பெரியார்: அவர் ஏன் பெரியார்?ஒன்றிய அரசின் அதிகாரங்கள்Ground Realityமார்க்கெட்கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்உளவுத் துறைதோள்பட்டைகேள்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!