ஆசிரியரிடமிருந்து... 1 நிமிட வாசிப்பு

வாசகக் குடும்பங்கள்

16 Apr 2022, 5:00 am
0

வாசகர்களோடு 'அருஞ்சொல்' சார்ந்த நகர்வுகள், அனுபவங்களை ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. நேரடி அறிவிப்புகள் போக, கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் சமஸ் பகிர்ந்துகொள்ளும் 'அருஞ்சொல்' தொடர்பான செய்திகளும் இங்கே இடம்பெறும்.

வாசகரும் விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியருமான திருவாசகம் குடும்பத்துடன் இன்று 'அருஞ்சொல்' அலுவலகம் வந்திருந்தார். அவர் மட்டும் அல்லாது அவர் மனைவி, பிள்ளைகள் என்று யாவரும் 'அருஞ்சொல்' வாசகர்கள். தமிழ் வாசிப்புச் சூழல், கல்விச் சூழல் தொடர்பில் வெகுநேரம் உரையாடினர்.

குழந்தைகள் ஜெய்பாரதி, அருனேஷ் இருவரும் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி மாணவர்களுக்கு 'அருஞ்சொல்' உதவியாக இருக்கிறது என்று பேசியவர்கள் இன்னும் என்னவெல்லாம் இதழில் வந்தால் நன்றாக இருக்கும் என்ற தம்முடைய அபிப்ராயங்களையும் பகிர்ந்துகொண்டார்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராகிவரும் ஜெய்பாரதி, அன்றாடம் அதிகாலை வாசிப்பை ‘அருஞ்சொல்’லோடு ஆரம்பிப்பதாகவும், தமிழில் தயாராகும் போட்டித் தேர்வர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இதழ் இருப்பதாகவும் தெரிவித்தார். 

குழந்தைகள் இருவருமே சேமிப்புப் பழக்கம் கொண்டவர்களாம். தம்முடைய சேமிப்பிலிருந்து ரூ.25,000/- வழங்கி 'அருஞ்சொல்' வைரச் சந்தாதாரராக இணைத்துக்கொண்டார்கள். 

எல்லோருமே சீக்கிரம் அச்சிதழாகக் கொண்டுவர வேண்டும் என்றார்கள். 

செய்வோம்!

- ஆசிரியர் சமஸ், முகநூல் பதிவிலிருந்து...

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






ஐந்தாவது கட்டம்தெற்கிலிருந்து ஒரு சூரியன்காப்பியம்சத்துணவுஉடல் உறுப்புபிராமி எழுத்துமத்திய உள்துறைச் செயலர்ஆயிரமாவது ஆண்டுகாஷ்மீர் கலவரம்தத்துவம்திறனுக்கு அப்பால்கைத் தொழில்பொருளியல்மதவாதப் பேச்சுகள்விவாதம்நியாயப் பத்திராமோடி – ஷா இணைஎருமை மாட்டைக் குறிப்பிட்டு மோடி பேசியது ஏன்? சமஸ்தேசத் தந்தைபூர்ணேஷ் மோடிகரும்பு சாகுபடிபஜாஜ் ஸ்கூட்டர்கள்மத நம்பிக்கைநிறவெறிவி.பி. சிந்தன்ப.சிதம்பரம் உரைஆண்களை அலையவிடலாமா?பாட்ஷாவும்காலை உணவு வழங்க நமக்குத் தேவை கண்ணியமான கற்பனைசோழக் கதையாடல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!